sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

/

கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

7


ADDED : ஜூன் 07, 2025 12:35 PM

Google News

7

ADDED : ஜூன் 07, 2025 12:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''கோவையில் கல்குவாரியில் நடந்த விதிமீறலில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் விதிகளை மீறி கல்குவாரி நடத்தியதாக ரூ.32.29 கோடி விதித்த அபராதத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குவாரி உரிமையாளர் செந்தாமரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (ஜூன் 07) சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.

அப்போது, ''மனுதாரருக்கு குவாரி நடத்த எந்த உரிமமும் இல்லை. எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகை குவாரி உரிமையாளரிடம் வசூலிக்கப்படும்'' என தமிழக அரசு விளக்கம் அளித்தது.

பின்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது:

* 2023ல் உரிமம் முடிந்தால், அதை தற்போது ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

* நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காக்கத்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

* குவாரியை மூடிவிட்டதாக அதிகாரிகள் அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, மறுபுறம் குவாரி செயல்பட அனுமதித்துள்ளனர்.

* சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை கமிஷனரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது.

* இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

* குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர். குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது.

* விதிமீறல் குறித்து லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us