sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

'நாங்கள் லஞ்சவாதிகள் என்றால்... அமெரிக்க அரசியல்வாதிகள் யார்?' கேட்கிறார் பாகிஸ்தான் அமைச்சர்

/

'நாங்கள் லஞ்சவாதிகள் என்றால்... அமெரிக்க அரசியல்வாதிகள் யார்?' கேட்கிறார் பாகிஸ்தான் அமைச்சர்

'நாங்கள் லஞ்சவாதிகள் என்றால்... அமெரிக்க அரசியல்வாதிகள் யார்?' கேட்கிறார் பாகிஸ்தான் அமைச்சர்

'நாங்கள் லஞ்சவாதிகள் என்றால்... அமெரிக்க அரசியல்வாதிகள் யார்?' கேட்கிறார் பாகிஸ்தான் அமைச்சர்


ADDED : செப் 19, 2025 12:34 AM

Google News

ADDED : செப் 19, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: ஊழல் புகாரில் தன் நாடு தேவையில்லாமல் அவதுாறுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆனால் இஸ்ரேலிடமிருந்து வெளிப்படையாகவே அமெரிக்கா லஞ்சம் பெற்று வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், தன் நாட்டு அதிகாரிகளுக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசு அதிகாரிகள் பெருமளவு பணத்தை, கருப்புப் பணமாக ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு மாற்றுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் அதிகரித்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் கவாஜா ஆசிப் விளக்கம் அளித்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

லஞ்சம் வாங்கியதற்காக நாங்கள் அவதுாறுக்கு உள்ளாகிறோம். எங்கள் நாட்டிலாவது லஞ்சம், ஊழல் மறைமுகமாக நடக்கிறது.

ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் மேற்காசிய நாடான இஸ்ரேலிடமிருந்து வெளிப்படையாகவே லஞ்சம் பெறுகிறார்கள். அரசியல் நிதியுதவி என்ற போர்வையில் அமெரிக்கா அத்தகைய லஞ்ச நடைமுறைகளை நிறுவன மயமாக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us