sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எல்லை நிலவரம்: இந்தியா - சீனா அதிகாரிகள் பேச்சில் முடிவெடுக்கப்பட்டது என்ன

/

எல்லை நிலவரம்: இந்தியா - சீனா அதிகாரிகள் பேச்சில் முடிவெடுக்கப்பட்டது என்ன

எல்லை நிலவரம்: இந்தியா - சீனா அதிகாரிகள் பேச்சில் முடிவெடுக்கப்பட்டது என்ன

எல்லை நிலவரம்: இந்தியா - சீனா அதிகாரிகள் பேச்சில் முடிவெடுக்கப்பட்டது என்ன

1


ADDED : மார் 25, 2025 10:13 PM

Google News

1

ADDED : மார் 25, 2025 10:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ஜங்: இந்தியா - சீனா எல்லையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் பீஜிங்கில் ஆலோசனை நடத்தினர்.

பெய்ஜிங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்கு ஆசியாவிற்கான இணைச் செயலர் கவுரங்கலால் தாஸ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். சீன தரப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஹோங் லியாங் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில், இரு நாட்டு எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான நதி விவகாரம் மற்றும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரை உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை விரைவில் துவக்குவது எனவும் முடிவு செய்தனர்.

எல்லை பிரச்னை தொடர்பாக இந்தாண்டு டில்லியில் நடக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது எனவும் இரு நாட்டு அதிகாரிகளும் முடிவெடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us