sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் பேச ஈரான் மறுப்பு

/

அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் பேச ஈரான் மறுப்பு

அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் பேச ஈரான் மறுப்பு

அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் பேச ஈரான் மறுப்பு


ADDED : செப் 25, 2025 12:30 AM

Google News

ADDED : செப் 25, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்:அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடி பேச்சு நடத்தப்படாது என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவித்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடான ஈரான், 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன.

அதன் பின் 2018ல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் முதல் பதவிக் காலத்தில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்.

அதன்பின் ஈரான் தன் விருப்பம் போல் அணு உற்பத்தியில் இறங்கியது. அணுசக்திக்கான முக்கிய தனிமமான யுரேனியத்தை அணு ஆயுத தரத்துக்கு செறிவூட்டியதாக புகார் எழுந்தது.

இது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கடந்த ஜூலையில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது. அவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும் உதவினார். 12 நாட்களுக்கு பின் இந்த மோதல் நின்றது.

தற்போது ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் 2015க்கு முந்தைய பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வரும்.

ஆனால் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது என ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக டிவி உரையில் அவர் பேசுகையில், “அமெரிக்காவின் நோக்கம் பேச்சு நடத்துவது அல்ல; அழுத்தம் தருவது. அமெரிக்கா பேச்சின் முடிவை முன்கூட்டியே அறிவித்துள்ளது. ஈரானின் அணு செயல்பாடுகளை நிறுத்துவதே அவர்கள் நோக்கம்,” என்றார்.






      Dinamalar
      Follow us