sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் தாக்குதலில் 56,000க்கும் மேற்பட்டோர் பலி: பாலஸ்தீனம் தகவல்

/

இஸ்ரேல் தாக்குதலில் 56,000க்கும் மேற்பட்டோர் பலி: பாலஸ்தீனம் தகவல்

இஸ்ரேல் தாக்குதலில் 56,000க்கும் மேற்பட்டோர் பலி: பாலஸ்தீனம் தகவல்

இஸ்ரேல் தாக்குதலில் 56,000க்கும் மேற்பட்டோர் பலி: பாலஸ்தீனம் தகவல்

3


ADDED : ஜூன் 24, 2025 06:08 PM

Google News

3

ADDED : ஜூன் 24, 2025 06:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெய்ர் அல்-பலாஹ்: காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் 56,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 3 ஆண்டுகளாக தரை, கடல் மற்றும் வான் வழித்தாக்குல் நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத்தின் அறிக்கை:

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 56,077 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 131,848 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே இரண்டு மாத போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன் பிறகு, மார்ச் 18 அன்று இஸ்ரேல் மீண்டும் சண்டையைத் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட 5,759 பேரும் இதில் அடங்குவர்,

கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் அல்லது உள்ளூர் மருத்துவர்களுக்கு அணுக முடியாத பகுதிகளில் புதையுண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இன்று அதிகாலை மத்திய காசாவில் உதவி லாரிகளுக்காகக் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களை நோக்கி இஸ்ரேலியப் படைகளும், ட்ரோன்களும் வான்வழி தாக்குதல் நடத்தி குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai