sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய துாதரகத்தை முற்றுகையிடுகிறோம் இங்கே வராதீர்கள்: -காலிஸ்தான் மிரட்டல்

/

இந்திய துாதரகத்தை முற்றுகையிடுகிறோம் இங்கே வராதீர்கள்: -காலிஸ்தான் மிரட்டல்

இந்திய துாதரகத்தை முற்றுகையிடுகிறோம் இங்கே வராதீர்கள்: -காலிஸ்தான் மிரட்டல்

இந்திய துாதரகத்தை முற்றுகையிடுகிறோம் இங்கே வராதீர்கள்: -காலிஸ்தான் மிரட்டல்


ADDED : செப் 18, 2025 12:40 AM

Google News

ADDED : செப் 18, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடாவில் உள்ள இந்திய துாதரகத்தை முற்றுகையிடப் போவதாக, 'சீக்கியர்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023ல் கொல்லப்பட்டார்.

இதில் இந்தியா மீது அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. இதையடுத்து, இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையே, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள், கனடாவில் உள்ள இந்தியத் துாதரகம், வழிபாட்டு தலங்களில் தாக்குதல்களில் ஈடுபட்டன.

கனடா பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டப் பின், இப்போதுதான், இந்தியா, கனடா உறவு மீண்டும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை தளமாகக் கொண்டு, கனடாவிலும் இயங்கும் சீக்கியர்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பு,

கனடா வான்கூவரில் உள்ள இந்திய துாதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் படுகொலையில் இந்திய துாதரக அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்லிமென்டில் தெரிவித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் இந்திய துாதரகங்கள், காலிஸ்தானியர்களை குறி வைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருகின்றன.

நாளை காலை 8:00 மணி தொடங்கி 12 மணிநேரத்துக்குள் இந்திய துாதரகத்தை முற்றுகையிட உள்ளோம். நாளை இந்திய துாதரகத்திற்கு வர திட்டமிட்டிருந்தவர்கள் வேறொரு நாளுக்கு அதை திட்டமிடவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கனடாவின் இந்திய துாதர் தினேஷ் பட்நாயக்கின் முகம் கொண்ட போஸ்டரை வெளியிட்டு, கனடாவில் இந்திய ஹிந்துத்துவாவின் புதிய முகம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்தியாவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திடமிருந்தோ அல்லது வான்கூவரில் உள்ள இந்திய துாதரகத்திடமிருந்தோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us