விழுப்புரம் புதுச்சேரி ரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுங்க சாவடி அருகே இரண்டு பக்கமும் யூடர்ன் வளைவு இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சகட்டுமேனிக்கு குறுக்கே ரோட்டை கடப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.