தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் இந்துஸ்தான் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி வினா போட்டி கோவை பீளமேடு கொடிசியா மைதானம் அருகில் உள்ள கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) பள்ளி யோக ஆசிரியர் காயத்ரி, தமிழ் ஆசிரியர் ஷாலினி, நூலகர் ஹேமலதா, பள்ளி முதல்வர் கவிதா, நிர்வாக தலைமை அதிகாரி நிவேதா, பள்ளிக் கல்வித் தலைவி சுகன்யா உள்ளிட்டோர்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.