அப்பாஸ் கல்சுரல் அமைப்பின், 32வது கலைவிழா சென்னை தேனாம்பேட்டையில் துவங்கியது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனுக்கு, லட்சுமி பெயின் அண்ட் பேலியேடிவ் கேரின் அறங்காவலர் தயாளன் சவுந்தர்ராஜன் மற்றும் அப்பாஸ் கல்சுரல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நினைவு பரிசை வழங்கினர். உடன் ஸ்ரீராம் ஐ.பி.எஸ், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துதற்காக தீயணைப்புத்துறையினர் ஹெலிகாப்டர் வாயிலாக தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து, முளைத்து அழுகி வீணாகின்றன.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.