முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவ விழாவில் உற்சவர் முருகன், வள்ளி- தெய்வானையுடன் அன்ன வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இடம்: திருத்தணி.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வழியில் உள்ள சுத்தமல்லி தடுப்பணையில் சீறிப்பாய்ந்து வெளியேறும் தண்ணீரில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காட்டன் பல்கலை வளாகத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம் அல்புகெர்க்கி நகரில் பழங்குடியின கலாசாரப் போட்டி நடந்தது. இதில் பாரம்பரிய உடைகளை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்ற பழங்குடியினர்.