ஸ்ரீ வித்யாதீர்த்த அறக்கட்டளை சார்பில், ஸ்ரீ ஆதிசங்கரர் தின நிகழ்ச்சியாக, மாநில அளவில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களுக்கு, சின்மயா மிஷனின் சுவாமி மித்ரானந்தா பரிசை வழங்கினார். உடன் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் சுப்பிரமணியம் மற்றும் சிருங்கேரி சாரதா பீடத்தின் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர். இடம் : கீழ்பாக்கம், சென்னை
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.