தினமலர் நாளிதழ், ராஜ் விஜய் டி.வி.எஸ்., நிறுவனத்தின் புதுச்சேரி மற்றும் கடலூர் கிளைகள், கடலூர் சுமங்கலி சில்க்ஸ் இணைந்து ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி கடலூர் செங்குத்த திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். அருகில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்க இயக்குனர் சீனிவாசன், கல்வியாளர் புகழேந்தி, டி.வி.எஸ்., நிறுவன புதுச்சேரி மண்டல விற்பனை மேலாளர் அரவிந்த், ராஜ் விஜய் டி.வி.எஸ்., நிறுவன மேலாண் இயக்குனர் சீனிவாச மூர்த்தி .
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.