டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம் முத்தியால்பேட்டை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 27ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம் முத்தியால்பேட்டை பள்ளி குழுமத்தின் தலைவர் வேணுகோபாலா பரிசுகளை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - சவுந்தர்யா, நடேச செட்டி திருக்கல்யாண மண்டப அறக்கட்டளையின் அறங்காவலர் பாலாஜி, பள்ளியின் இயக்குனர்கள் நாராயணன், ஏகாம்பரம் மற்றும் விஜயகுமார். இடம் : மண்ணடி, சென்னை
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.