சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் பிறந்தநாளை முன்னிட்டு, விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இடமிருந்து வலம் - சங்கர நேத்ராலயா தலைவர் கிரிஷ் சிவ ராவ், நூலாசிரியர் இருங்கோவேள், எழுத்தாளர் சிவசங்கரி, நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்ட முதுநிலை நிபுணர் நிர்மலா சுப்பிரமணியன், நூலை வெளியிட்ட ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தலைவர் ராஜேந்திரன், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் டாக்டர் சுரேந்திரன். இடம் : நுங்கம்பாக்கம், சென்னை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துதற்காக தீயணைப்புத்துறையினர் ஹெலிகாப்டர் வாயிலாக தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து, முளைத்து அழுகி வீணாகின்றன.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.