பசுமைவழிச் சாலை விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் கண்ணுக்கட்டிய தூரம் வரை பசுமையாக இருக்கும் வயல்வெளியில் ஊர்ந்து செல்லும் வாகனம். இடம் புதுச்சேரி அடுத்து அரியூர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.