திருவண்ணாமலையில் லோக்சபா தேர்தலில் என் வாக்கு என் உரிமை 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விரல் மாஸ்க் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.