கடலூரில் இருந்து சென்னை நோக்கி புதுச்சேரி வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நோனாங்குப்பம் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். லாரியின் பின்பக்க கதவு சீல் வைக்கப்பட்டு இருந்ததால், அதை கடைசி வரை திறக்காமல் ஆவணங்களை மட்டுமே பரிசோதனை செய்து லாரியை அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் குறித்து, பயிற்சி கையேடுகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இடம்: டிபிஐ வளாகம் நுங்கம்பாக்கம்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.