பொதுமக்களுக்கு ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், என் வாக்கு என் உரிமை; வாக்களிப்பது எனது கடமை என விழிப்புணர்வு நிகழ்ச்சியை ராயபுரம் மண்டல உதவி செயற்பொறியாளர் பழனி துவங்கி வைத்து, பொதுமக்களிடம் கையொழுத்து பெற்றார். இடம்: தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பு.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.