லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் சென்னை, தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள வாக்கு மையத்தில் இருந்து ஓட்டு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.