மத்திய தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் எழுதிய தமிழ் கல்வெட்டுகள் புலப்படுகின்ற வணிக குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள் - வரலாறு எனும் நூலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வெளியிட்டார். உடன் மேடையில் இடமிருந்து - வலம் தமிழ் ஹெரிடேஜ் சென்டர் சிவசங்கர் பாபு, தொல்லியல் அறிஞர் ராஜன், மத்திய தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம்.இடம்: கோட்டூர்புரம், சென்னை.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.