திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
கோடை சீசனில் நிலவும் கடும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வீடு தோறும் ஏசி பொருத்தும் நிலை வந்துவிட்டது. ஆற்றில் குளுகுளுவென ஓடும் நீரை பார்த்தால் மனம் சும்மா இருக்குமா, ஆனந்த குளியல் போடுவது தானோ ஆறுதல். இடம்: சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, வால்பாறை.
கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகளான சந்திரசேகரனும், எர்ணாகுளம் சிவகுமார் யானையும், துதிக்கை உயர்த்தி வடக்குநாதரை வணங்கி உபசரித்து செல்லும் நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
உலகின் மிக நீளமான கடல் நடைபாலம் ஐரோப்பிய நாடான பின்லாந்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.2 கி.மீ., நீளம் கொண்ட இப்பாலம் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியின் தீவுகளையும், நகர மைய பகுதியையும் இணைக்கும் ரம்மியமான நடைபாலமாக திகழ்கிறது.
கடும் குளிர் என்பது ரஷ்யாவில் சகஜமானது. திடீரென 21 செ.மீ அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இது 1880ம் ஆண்டுக்கு பின், ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச பனிப் பொழிவாகும். 80 கி.மீ., வேகத்தில் பனிக்காற்றும் வீசியது. கடும் குளிருக்கு இடையே மாஸ்கோவின் புகழ்பெற்ற சிவப்பு சதுக்கத்தில் நடந்து சென்றவர்கள்.