சுட்டெரிக்கும் வெயிலுக்கு பயணிகளுக்கு காற்றோட்டமாக இருப்பதற்காக பஸ்சில் பெரிய ஜன்னல் வைத்துள்ளார்களோ என நினைக்க வேண்டாம் தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து போடி சென்ற (டி.என்.57, என்.1985) பஸ்சில் கண்ணாடி உடைந்து ஆபத்தாக உள்ள அவல நிலை தான் இது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.