ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இ பாஸ் சோதனை செய்ய கல்லாறு செக்போஸ்டில் தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார். அப்போது ஊட்டி செல்ல இருந்த சுற்றுலா பயணி களிடம் இ பாஸ் சேவை குறித்து சாதக பாதகங்களை கேட்டு அறிந்தார். அருகில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கோவை மாவட்ட கலெக்டர் காந்தி குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.