இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ இயக்கமான ஸ்பிக் மெக்கே- வின் 9 வது மாநாடு சென்னை ஐ.ஐ.டி யில் நேற்று துவங்கியது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நினைவுப் பரிசு வழங்கிய ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி உடன் இடமிருந்து திரிபுரா மாநில கவர்னர் இந்திர சேனா ரெட்டி, ஸ்பிக் மெக்கே தலைவர் ராதாமோகன் திவாரி, தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜெயஶ்ரீ கண்ணன்.இடம் : கிண்டி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துதற்காக தீயணைப்புத்துறையினர் ஹெலிகாப்டர் வாயிலாக தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து, முளைத்து அழுகி வீணாகின்றன.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.