சென்னையில் மீரான் தியேட்டர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழா நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலர் சஞ்சய் ஜாஜு உடன் இடமிருந்து நடிப்பு பயிற்சியாளர் வித்யா பாலகிருஷ்ணன், ஐ ஜென் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாலா மணியன், நடிகர் மற்றும் சட்ட ஆலோசகர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி, நடிகர், இயக்குனர், அம்ஜத் மீரான் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக பிராந்திய தலைவர் ரோஹிணி கெளதமன்.இடம் : ஆர். ஏ புரம்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.