சென்னை மைலாப்பூர் ரஸிக ரஞ்சனி சபா சார்பில் நேற்று நடைபெற்ற செங்கோல் மறுமலர்ச்சி தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான மகாதேவனுக்கு செங்கோலை பரிசாக சபா தலைவர் சந்தான கிருஷ்ணன் வழங்கினார் அருகில் துக்ளக் குருமூர்த்தி,சபா செயலாளர் நாகராஜன்
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.