காரமடை அடுத்துள்ள கட்டாஞ்சி மலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இயற்கை அழகை ரசிப்பதுடன் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்துக் கொள்கின்றனர். முன்னெச்சரிக்கையாக, நெடுஞ்சாலைத் துறையினர் ஊட்டி, மற்றும் கோத்தகிரி சாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பான காட்சி முனைகள் உள்ளது போல் இங்கும் ஏற்படுத்தினால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.