தமிழக முழுவதும் பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில் சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.