சென்னை வி.ஐ.டி பல்கலையில் நடந்த குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில், இந்தியாவின் முற்போக்கான பாதை குறித்த மாநாட்டை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து சட்ட விவகாரங்கள் துறை சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் செயலர் ராஜீவ் மணி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் முருகன், தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய்.இடம் : கேளம்பாக்கம்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததையொட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சுவார்த்தை நடத்தினார்.