சிவகாசியில் தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை சென்னை இன்ஸ்டிடிட்யூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.(வலமிருந்து) கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன் மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் சுப்புராஜ்,கல்வி ஆலோசகர் அஸ்வின், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன்,பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிசாமி.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.