கவுடியா மிஷன் ஸ்தாபக ஆச்சாரியார் மற்றும் உலக ஹரே கிருஷ்ண இயக்கத்தின் முன்னோடி, ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதரின், 150வது பிறந்தநாள் விழா, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது இதில் விழா சிறப்பு மலரை தமிழக கவர்னர் ரவி வெளியிட்டார் உடன் இடமிருந்து சமஸ்கிருத பேராசிரியர் வெங்கடகிருஷ்ணா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கவுடியா மிஷன் ஆச்சாரியார் பக்தி சுந்தர் கோஸ்வாமி மகாராஜ்,தொழிலதிபர் நல்லி குப்புசாமி,பா.ஜ.க தேசிய கவுன்சில் உறுப்பினர் எம்.என் ராஜா.இடம் : கிண்டி.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்