ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட 391 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து துறைச் செயலர் ககன் தீப்சிங் பேடி, அமைச்சர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.