கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடம், நாதகவுண்டன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து பேசினார். அருகில், எம்.எல்.ஏக்கள் வேலுமணி, பொள்ளாட்சி ஜெயராமன், ஆனந்தன், ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க செயல் தலைவர் வெற்றி உள்ளிட்டோர்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.