கோவை மாநகர மனவளக்கலை அறக்கட்டளைகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 114 வது ஜெயந்தி உலக அமைதி தின விழா வேதாத்திரிய கருத்தரங்கு, கோவை ஆர்.எஸ்.,புரம் சிந்து சதன் ஹாலில் நடந்தது. இதில் கோவை அறக்கட்டளை துணைத் தலைவர் சுப்பிரமணியன் பேசினார். அருகே, (இடமிருந்து) ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., நாகராசன், பி.என்.,புதூர் அறக்கட்டளை பேராசிரியர் சமத்துவ ராணி, வீரியம்பாளையம் அறக்கட்டளை பேராசிரியர் முருகேசன், கோவை மத்திய மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர் அருணா உள்ளிட்டோர்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.