மதுரை கீழ ஆவணி மூல வீதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அப்பகுதியை பேரிக்கார்டுகள் அமைத்து வாகனங்களை ஒழுங்கு படுத்தினர். இனி பேரிகார்டுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.