கவர்னர் மாளிகையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சீனாவின் பார்வையில் , இந்தியா - சீனா உறவு என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் விஜய் கேசவ் கோக்லே, உடன் இடமிருந்து தமிழக கவர்னர் ரவி ,ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி மற்றும் இராணுவ தக்ஷின் பாரத் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங்.இடம் : கிண்டி.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்