கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த 35-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்படுத்தல் சோதனை மற்றும் தரச்சான்றிதழ் இயக்குனரகத்தின் பொது இயக்குனர் வெள்ளைப்பாண்டி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அருகே, (இடமிருந்து) கல்லூரி முதல்வர் சுமித்ரா, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், இயக்குனர் நாராயணன் உள்ளிட்டோர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.