தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் ;மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்விக் குழுமம் ஆகிய இணைந்து வழங்கும் பதில் சொல் பரிசை வெல் வினாடி- வினா நிகழ்ச்சி .கோவை ஆர் எஸ் புரம் மாநகராட்சி எஸ். ஆர். பி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவிகளுடன் (இடமிருந்து வலம்) ஒருங்கிணைப்பாளர் கலாதேவி ,ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ,முதல்வர் ரமேஷ், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி ,கல்வி அலுவலகர் குணசேகரன் ,ஆசிரியர் ஸ்ரீ லதா, ஒருங்கிணைப்பாளர் ஜெயமணி, மற்றும் ஆசிரியர் சுகுணா.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.