திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று இரண்டாம் பிரகாரத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், 'மறுவூடல்' நிகழ்ச்சி நடந்தது. இதில் சுவாமிகள் ஆடிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி, ''அண்ணாமலையாருக்கு அரோகரா'' என கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.