அண்ணா நூற்றாண்டு நூழகத்தில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் இரும்பின் தொன்மை என்ற தமிழ் மற்றும் ஆங்கில நூலினை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார் உடன் இடமிருந்து தலைமைச் செயலர் முருகானந்தம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திலீப் குமார் சக்கரபார்த்தி, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு மற்றும் வேலு.இடம் : கோட்டூர்புரம்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.