சிவகங்கை உதய தினம் விழாவில் வரலாற்று ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு சமூகம் கலை இலக்கிய துறைகளில் சேவை புரிந்தமைக்கான சான்றிதழை பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் வழங்கினார்.இடமிருந்து செயலாளர் குமரகுரு ,மன்னர் பள்ளி, கல்வி நிறுவனங்கள் தலைவர் மகேஷ் துரை. தேவஸ்தான மேலாளர் இளங்கோ.
சென்னை சேப்பாக்கம் விருதுநகர் வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.