இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி சென்னை எழும்பூர் அருங்காட்சியகவளாகத்தில் நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து அமைக்கப்பட்ட அரங்குகளில் உள்ள பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.