சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டியில், முதல் பரிசை வென்ற கிழக்கு தாம்பரம் சங்கரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஸ்ரீவத்ஸா குமார் மற்றும் அனன்யா. உடன் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், தமிழ் ஆசிரியை சாந்தி லட்சுமி, அக்னிகுல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மொயின், தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி.
சென்னை சேப்பாக்கம் விருதுநகர் வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.