மே மாதத்தின் இரண்டாம் பாதியில் காற்றின் வேகம் வியக்கத்தக்க வகையில் குறையும். இந்த நாட்களில் தான் நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய பயணம் மேற்கொள்வர். அதற்காக அடிவார முகாமில் கூடாரம் அமைத்து காத்திருக்கும் மலையேற்ற வீரர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசு நிறுவனம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. நெல்லிற்கான தொகை இதுவரை சில விவசாயிகளுக்கு வழங்கப் படவில்லை. கடந்த சில தில நாட்களாக பெய்த மழையில் மூட்டைகள் சேதமடைந்து நெல்மணிகள் முளைத்துள்ளன.
பஞ்சாபில் நெல் மற்றும் கோதுமைக்கு மாற்றாக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்குள்ள பட்டியாலாவில் நன்கு விளைந்த சூரிய காந்தி பூக்கள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோடை வெயில் கொளுத்துகிறது; அதன் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தாயும்-சேயும் துணியால் போர்த்தியபடி சென்றனர்.
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட புலி மீது தண்ணீரை ஊற்றி குளிர்வித்த வனத்துறை ஊழியர்.
உத்தரபிரதேச மாநிலம் காசியில் பழமையான மற்றும் நெரிசலான தால் மண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.