தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் கோவை கொடிசியா அரங்கில் மாணவ , மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது.கருத்தரங்கினை (இடமிருந்து) கற்பகம் கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் ரிலேஷன் இயக்குனர் பானு, டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மதுரா பழனிச்சாமி, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், அமிர்தா விஷ்வ பீடம் பேராசிரியர் ரமேஷ்குமார், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி செயலாளர் யசோதாதேவி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.