தெலுங்கானாவின் ஹைதராபாத்தில், 'ஸ்வாட்' எனப்படும் மகளிர் சிறப்பு அதிரடிப்படை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படையைச் சேர்ந்த பெண் போலீசார், குற்றவாளிகளை சமாளிப்பது, கும்பலை கட்டுப்படுத்தும் பணிகளில் தங்கள் திறமைகளை நேற்றைய பயிற்சியின்போது வெளிப்படுத்தினர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.