கோவை ராம்நகர் அய்யப்ப பூஜா சங்கத்தில் நடந்த ஜென்ம தினமஹோத்ஸவ நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுகிரஹ பாஷணம் நடந்தது. ஆர்வத்துடன் பிரசங்கத்தை கேட்ட பக்தர்கள்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.