இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நினைவு பரிசை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சார்யா சுவாமிகள் மற்றும் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல தேசிக அடிகளார்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.