இன்னுயிர் காப்போம்- திட்டத்தில் ௪ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்,இத்திட்டத்தின் கீழ் பாரிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 4-வது லட்சம் நபராக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை சேப்பாக்கம் விருதுநகர் வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.