பூத்து குலுங்கும் கேந்தி மலர்கள்: சமய வழிபாடுகளிலும், பண்டிகை காலங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் அழகிய கேந்தி மலர், திருவண்ணாமலை வட்டாரத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக பூத்துள்ளது. கேந்தி மலர்களை மகிழ்ச்சியுடன் பறிக்கும் விவசாய பெண்; பின்னணியில் அண்ணாமலையார் மலை. இடம்: அத்தியந்தல்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.